இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் இவ்வாலயத்தின் மேற்குத் திசையில் நின்றஇத்தி மரத்தடியில் சிறுகுடிசையில் வசித்தவிஸ்வகுலப் பெண்ணொருவரின் சொப்பனத்தில் விக்னேஸ்வரப்பெருமான் தோன்றிதன்னை அக்குடிசையில் வைத்து வழிபடுமாறு வேண்டவே அவரும் அதன்படி செய்தார். இவரின் வழித்தோன்றலான சின்னத்தம்பி நாகமுத்து என்பவர் 1886 ஆம் ஆண்டில் தூபியுடன்கூடிய மண்டபத்தினை அமைத்து கும்பாபிN~கம் செய்ததாகவும் இக்காலத்திலிருந்து கோவில் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து இன்றைய நிலையினை அடைந்தது எனலாம். ஆரம்பத்தில் நடைபெற்று வந்த அலங்கார உற்சவமானது 1994 ஆம் ஆண்டிலிருந்து சித்திரை மாதம் கொடியேற்றத்துடன்கூடிய பத்து நாட்கள் நடைபெறும் மகோற்சவமாக மாற்றமடைந்து ஆலய வளர்ச்சியேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.