Thursday, April 25

அன்பும் பண்பும்
நிறைந்த தமிழ் நெஞ்சங்களுக்கு
அன்பு வணக்கம் !

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம்வளர்ந்து சிறந்ததும் இந்நாடே …”

யாழ்ப்பாணம்! இது தமிழர்களின் அடையாள இருப்பினை வெளிக்காட்டும் ஒரு பாரம்பரியமான பிரதேசம் ஆகும். இலங்கைத்தீவில் தமிழர்களுடைய அடையாளங்களும் பண்பாட்டு விழுமியங்களும் பெருமளவில் பேணிப்பாதுகாக்கும் பிரதேசங்களில் யாழ்ப்பாணத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தொல்லியலிலும் அடையாள இருப்புகளை உறுதி செய்வதிலும் ஒரு பாரம்பரியம்மிக்க பிரதேசமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் பெருமைகளை அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கு கையளிப் பதன் ஊடாகவே ஒரு மரபுரிமைச் சொத்து பாதுகாக்கப்படும். “சாகில் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த பண்டிதர் சச்சிதானந்தம் போன்ற பல்வேறு புலவர்கள் தம் கால்பட நடந்த மண் இது. வரலாற்றுக் காலம் தொட்டு யாழ்ப்பாணத்திற்கென்றொரு தனித்துவம் இருந்திருக்கிறது. தமிழர்களுடைய தொன்மையான ஆதிக்குடிகளின் மரபுவழிப்பட்ட வழித்தோன்றல்களால் இன்றும் யாழ்ப்பாணம் தனது பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. 

இத்தகைய யாழ்ப்பாணத்தினுடைய பெருமைகளையும் பாரம்பரியங்களையும் வருகின்ற தலைமுறை அறிந்து கொள்வதற்கும், நேரிடையாக பார்த்துக் கொள்வதற்குமான ஒரு ஏற்பாடே யாழ்ப்பாண வாழ்வும் வளமும் சார்ந்த நூற்றாண்டுப் புலமைகளின் தேடல்களை அடுத்த…….. Read More  

மார்க்கண்டு அருள்சந்திரன்,எம்,ஏ.

இயக்குநர்,

யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடம்.

ஆளுமைகள்

உணவு

உறையுள்

உபகரணங்கள்

கலைகள்

நிகழ்வுகள்

அறிவிப்பு பலகை

மரபின் பெட்டகம் சரிந்தது.          இந்த மண்ணில் தன் பாதம்பட நடந்து தமிழ் வளர்த்த பேராசான்.  சாகில் தமிழ் படித்துச் சாக வேண்டும். என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் என்ற பண்டிதர் மரபின் நீட்சியாய் நிதர்சனமாய் கடைசி வரை வாழ்ந்தவர். ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்க செயலராய் அமர்ந்து அதற்கு தனை முழுமையாய் அர்ப்பணித்தவர்.  நானும் அவரும் பல்வேறு பணிகளை மேற்கொண்டோம். இருவரும் பல இரவுகள் ஒன்றாய் இருந்து நாடகம், இலக்கியம், மரபு என சிந்தனை பொழுதுகளாய் நிறைந்தன.  கல்யாணியின் இணை ஆசிரியராய், பெட்டகத்தில் மதியுரைஞராய், இணைந்து பணி இயற்றினார். 87களின் பின் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது. எத்தனை கருத்துரை பேச்சு. ஆழ்ந்தகன்ற பணி. இனி எங்கே காண்போம் இவையனைத்தும். மரபில் தன்னை இணைத்து கல்வியால் உயர்ந்து பாரெல்லாம் போற்றும் உத்தமராய் பணித்திருந்தகையாய்,  கலை நேயப் பரிதியாய் எம் நெஞ்சங்களில் என்றும் வாழ்வார்.…

இணைய வழி  அரும்காட்சிகயத்திற்கான பராமரிப்புச் செலவு அன்பளிப்பு  யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற இணையவழி அரும்காட்சியகத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதற்காக அதன் பராமரிப்பு ஆள்களப்பெயர் (Domain Name) மற்றும் வருடாந்த வாடகை, ஆகிய செலவினங்களுக்கான (ரூபா 25,000.00) இருபத்தையாயிரம் ரூபாவினை  கலைஞர்களின் சார்பில்  பொறுப்பேற்று வழங்கிய கலைஞர், தொல்புரம் கலாலயம் நாடக மன்றத்தின் தலைவர் யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடத்தின் மதியுரைஞர் மூதவை உறுப்பினருமான திருவாளர் செல்லையா உதயச்சந்திரன் அவர்களுக்கு யாழ்ப்பாணப்பெட்டகம்- நிழலுருக் கலைக்கூடத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அவர் கலையுலகில் பிரகாசிக்க வாழ்த்துகின்றோம்.

பிள்ளையாராலயம்  அருள்மிகு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் கோயில் கோண்டாவில் அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் கோயில் ஆசிமடம் கோண்டாவில் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயம் நாயன்மார்கட்டு அருள்மிகு ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையாராலயம்,நீர்வேலி அருள்மிகு ஸ்ரீ அகாயக்குளம் பிள்ளையார் கோயில் , அராலி தெற்கு அருள்மிகு ஸ்ரீ அழகொல்லை விநாயகர் ஆலயம் அளவெட்டி அருள்மிகு ஸ்ரீ ஆனைவிழுந்தான் பிள்ளையார் ஆலயம் – இளவாலை அருள்மிகு ஸ்ரீ இத்தியடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம் – சங்கத்தானை,சாவகச்சேரி அருள்மிகு ஸ்ரீ இறுப்பிடடி பெரியபுலம் பிள்ளையார் ஆலயம் – 6ஆம் வட்டாரம்,புங்குடுதீவு அருள்மிகு ஸ்ரீ இலந்தைவனம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் வேலணை, அருள்மிகு ஸ்ரீ உப்புமடம் பிள்ளையார் ஆலயம் அருள்மிகு ஸ்ரீ ஜெய நீராவி வீரகத்தி விநாயகர் ஆலயம் அருள்மிகு ஸ்ரீ ஒக்களைப்பிள்ளையார் ஆலயம் – கைதடி அருள்மிகு ஸ்ரீ கருணாகரப்பிள்ளையார் ஆலயம் – உரும்பிராய் அருள்மிகு ஸ்ரீ காசிப்பிள்ளையார் ஆலயம்…

விளம்பரபகுதிகள்

error: Content is protected !!
error: Content is protected !!