1917.06.08 ஆம் நான் அச்சுவேலி- வளலாய் என்னும் இடத்தில் பிறந்தவர். பாரம்பரியக் கலைவடிவங் களில் ஒன்றான பார்சிவழி அரங்க முறையின் ஆர்மோனிய இசைக் கலைஞன். நடிகமணி வீ.வீ.வைரமுத்துவினது காலம் தொடக்கம் இறக்கும் வரையிலான காலம் வரை யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றப்பட்ட அத்தனை பார்சிவழி அரங்கின் பின்னணி இசையில் ஆர்மோனிய வித்துவானாக பெரும் பங்காற்றியவர். பார்சி அரங்கு மட்டுமன்றி காத்தவராயன் கூத்துக் கலையிலும் ஆர்மோனிய வித்துவானாகவும் பங்காற்றியவர். கானவிநோதன், இசைஞானக்கை மலரோன் போன்ற பட்டங்கள் பெற்றவர். 1985.01.01 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.