Monday, February 17

கணேசபிள்ளை. எஸ். எஸ்

0

1937.06.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வரணியில் பிறந்தவர். இதனாலேயே இவர் தனது புனை பெயரை ‘வரணியூரான்’ என்று வைத்துக்கொண்டார். வானொலி, மேடை நாடக நடிகரும், நாடகா சிரியருமாவார். மூன்று தலைமுறை காலத்துக்கு மேலாக வானொலியில் நகைச்சுவை நாடகங்களில் நடித்தும், எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி, இயக்கி, நடித்துமிருக்கிறார்.இவர் ‘அபிராமி’ எனும் விளம்பர நிறுவனம் ஒன்றை யும் நடத்தி விளம்பர நிகழ்ச்சிகள் பலவற்றை இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கிறார். கொழும்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டே கிடைக்கும் மிகுதி நேரத்தில் இலங்கை வானொலியிலேயே தனது நாடகப் பணியைத் தொடர்ந்தவர். இவர் எழுதி நடித்த புளுகர் பொன்னையா,விளம்பர நிகழ்ச்சியாக ஒரு வருடம் ஒலிபரப்பான ‘இரைதேடும்ப றவைகள்’ நாடகம் ஆகியன பலரது அபிமானத்தைப் பெற்றது. இரைதேடும் பறவைகள் நாடகம் பின்னாட் களில் புத்தக வடிவில் வெளிவந்தது. 1995 இல் நாடகக் கலைஞர்களை அழைத்துக்கொண்டு ‘தாத்தாவின் ஆசை’ என்ற நாடகத்தைக் கனடாவில் பல பாகங்களிலும் நடத்தினார். வானொலி தொடர்நாடகங்களான புளுகர் பொன்னையா, அசட்டு மாப்பிள்ளை, இரை தேடும் பறவைகள் ஆகியனவும்மேடை நாடகங்களாக பாசச்சுமை, நம்பிக்கை, புளுகர் பொன்னையா, அசட்டு மாப்பிள்ளை, கறுப்பும் சிவப்பும், ஒருத்தருக்கும் சொல்லாதே, தாத்தாவின் ஆசை ஆகியனவும் தொலைக்காட்சி நாடகங்களாக சமூகசேவகி, நம்பிக்கை, காத்திருந்தவன், இனிப்பாருங்கோவன், வருடம் பிறந்தது, வாடகை வீடு, பாசச்சுமை ஆகியனவும் வாடைக் காற்று திரைப்படத்தில் நடித்தும் “வரணியூரான்” என்றபெயரில் சிறுகதைகளை தினகரன், வீரகேசரி போன்ற தேசிய தினசரிகளில் எழுதியிருக்கிறார். இரை தேடும் பறவைகள் (வானொலி நாடகம்),அசட்டு மாப்பிள்ளை (மேடை நாடகம் )ஆகிய நூல்களை வெளியிட்டுள்ள இவருக்கு கமலாலயம் அமைப்பு ‘கலைத்தென்றல்’ பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. இவர் 1995.08.30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!