1929.10.04 ஆம் நாள் யாழ்ப்பாணம் – நல்லூர் என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் நாதஸ்வர மேதையாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர். புல்லாங்குழல் கலையில் கைதேர்ந்தவர். இவருடைய கலைச்சேவை களைப் பாராட்டி இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. 2004.10.05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.