யாழ்ப்பாணம்- இணுவில்; என்னுமிடத்தில் 1915 ஆம் ஆண்டு பிறந்தவர். நாதஸ்வர வித்துவானான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர். பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவர். 1970 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.