1940.05.21 ஆம் நாள் வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மகுடம் காத்த மன்னன், மயானகாண்டம் ஆகிய நாடகங்களில் பிரதான பாத்திரமேற்று நடித்தவர். 1961 ஆம் ஆண்டு இலங்கையில் தயாரிக்கப்பட்ட தோட்டக்காரி என்ற திரைப்படத்தில் நடித்தவர். இவரது கலைச் சேவையைப்பாராட்டி கலைத்தென்றல், கலைமன்னன் போன்ற விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப் பெற்றவர். 2007.10.03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.