1933.05.08 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நாச்சிமார் கோயிலடி என்னும் இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்துத் தவில் மேதைகளில் குறிப்பிட்டுப் பேசக்கூடியவரான இவர் இக்கலையில் பல சீடர்களை உருவாக்கியவர். இலங்கை அரசின் கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம், கலைமாமணி, கரவேகர ஞானகேசரி, தவிற்சக்கரவர்த்தி போன்ற பட்டங்கள் வழங்கப்பெற்றவர். 2001.07.28 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.