செல்லையா, அருணாசலம், பொன்னையா
1938-01-19 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரி,மீசாலை என்ற இடத்தில் பிறந்தவர். எழுத்து, நாடகம், பேச்சுக்கலைகளில் சிறப்பான வெளிப்பாடுடையவராய்த் திகழ்ந்தவர். இருப்பினும் நாடகக் கலையில் அதிக ஈடுபாடுடையவராய் பல்வேறு கலைப் படைப்புகளில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். முத்தமிழ் வித்தகர், நாடகச்செம்மல் போன்ற பட்டங்கள் பெற்றவர். 2006 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.