6ஆம் வட்டாரம், புங்குடுதீவு புங்குடுதீவில் முதலாவதாக அமைக்கப்பட்ட கோவில் என்ற பெருமையைப்பெற்றதுடன் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட இவ்வாலயமானது தனிநாயக முதலி பரம்பரையினரால் உருவாக்கப்பட்டதாகும். இக்கோயிலின் மூலமூர்த்தியை தனிநாயக முதலியின் வாரிசான இளங்காத்தமுதலி என்பவர் சீந்தில் கொடியினால் சுற்றி நெடுந்தீவிலிருந்து கொண்டுவந்து பிரதிஷ்டைசெய்து அமைக்கப்பட்ட கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.