யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப்பொதுவாக அழைக்கப்படும் சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகும். இங்கு தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் கும்பம் அன்று நிறைவடைவதாக 10 நாட்கள் ஆலயத்திருவிழா நடைபெறும். இங்கு திருவிழாக்ஷகாலத்தில் ஒருநாள் தெப்பத் திருவிழா என்று ஆலயக் கோவில் குளத்தில் தோணிமூலம் சுவாமி வலம்வருவது குறிப்பிடத்தக்கதொன்றாகும். இவ்விஷேட நாள் அன்று கொழும்புத்துறை மக்கள் மட்டுமன்றி, பக்கத்தில் உள்ள அரியாலை மக்களும் பெருமளவில் பங்குகொள்வர். இவ்வாலயம் 2004 இல் மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இவ்வாலயத்தின் அருகேசிறுவர்களுக்கான விளையாட்டுத்திடலும் நூலகமும் அமைந்துள்ளன