Tuesday, February 18

சுபைர் இளங்கீரன்

0

 

1927 -09 – 12 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். 20 வயது முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். மலேசியாவில் இனமணி பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த இவர் இலங்கை யில் தொழிலாளி, ஜனவேகம் ஆகிய அரசியல் ஏடுகளின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அரசியல், பொருளாதாரம், சரித்திரம், சமூகப் பிரச்சினைகள் மதம் சார்ந்த கட்டுரைகள் எழுதியிருக் கிறார். தினகரன் பத்திரிகையில் இவர் தொடராக எழுதிவந்த நீதியே நீ கேள் தொடர்கதை வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டதோடு பின்னர் நூலாக வெளிவந்தது. இலங்கை வானொலி தேசிய சேவையில் இவர் எழுதிய ஏராளமான நாடகங்கள் ஒலிபரப்பாகின. “மனித புராணம்”, “வாழப்பிறந்தவர்கள்” போன்ற தொடர் நாடகங்களும் அவற்றில் அடங்கும். பாரதி நூற்றாண்டை ஒட்டி இவர் எழுதித் தயாரித்த மகாகவி பாரதி நாடகம் 1982 டிசம்பரிலும், 1983 மார்ச்சிலும் கொழும்பில் மேடையேறியது. ஒரே அணைப்பு, மீண்டும் வந்தாள், பைத்தியக்காரி, பொற்கூண்டு, கலாராணி, மரணக் குழி, காதலன், அழகு ரோஜா, வண்ணக் குமரி, காதல் உலகிலே, பட்டினித் தோட்டம், நீதிபதி, எதிர்பார்த்த இரவு, மனிதனைப் பார், மனிதர்கள், புயல் அடங்குமா? (1954, தினகரன்), சொர்க்கம் எங்கே (1955, தினகரன்), மனிதர்கள் (1956, தினகரன்), இங்கிருந்து எங்கே? (1961, தினகரன்), காலம் மாறுகிறது (1964, தினகரன்), மண்ணில் விளைந்தவர்கள் (1960, தமிழன்), அவளுக்கு ஒரு வேலை வேண்டும் (1972, வீரகேசரி), அன்னை அழைத்தாள் (1977, சிரித்திரன்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தென்றலும் புயலும் (நாவல், 1955), நீதியே நீ கேள்! (நாவல், 1959), ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் (1994), தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் (கட்டுரைத் தொகுப்பு, 1993), பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும் (கட்டுரைத் தொகுப்பு, 1992), ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் அமைந்துள்ள குளத்தடி பள்ளிவாசல் (சின்னப் பள்ளிவாசல்) சீர்திருத்த சபையின் செயலாளராகக் கடமையாற்றி பெரியகுளம், சின்னக்குளம் ஆகியவற்றைப் புனரமைத்த இவரை இலங்கை முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சு 1992 முற்பகுதியில் வாழ்வோரை வாழ்த்துவோம் எனும் வைபவத்தில் இலக்கிய வேந்தர் எனும் பட்டத்தையும் விருதையும் வழங்கிக் கௌரவித்தது. 1992 இல் இந்துசமய, கலாசார இராஜாங்க அமைச்சு நடத்திய சாகித்திய விழாவில் இலக்கியச்செம்மல் எனும் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது. 1997 – 09 -12 அம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!