200 வருடங்களுக்கு முன்னர் சாணியினால் அமைக்கப்பட்ட பிள்ளையாராக இருந்தவிநாயகப் பெருமானை கருங்கல் விக்கிரகத்தில்எழுந்தருளச்செய்து வழிபட்டு வருகின்றனர்.ஏழாலைப் பிரதேசத்தில் முதன்முதலில் 1902இல் தேரோடிய கோவில் இதுவென ஆலயவரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. பின்னர்சிலகாலம் பூசை வழிபாடுகளின்றி காணப்பட்டது.புளியங்கண்டையர் என்பவர் வருமானம் எதுவுமின்றி கோயிலின் பூசைகளைச் செய்து வந்தார்.பின்னர் கிராம சேவையாளரான வேலுப்பிள்ளை என்பவர் அப்போதைய கிராமசபைத் தலைவரான முருகேசு உபாத்தியாயரிடம் ஆலயநிர்வாகப் பொறுப்பினைக் கையளித்தார்.இவராலும் இவரது மகனான முருகேசுபாலசுப்பிரமணியம் என்பவராலும் கோவில்தொடர்ச்சியாக பரிபாலிக்கப்பட்டு வந்தது.1920இல் கும்பாபிஷேகமும், 1975 இல் குடமுழுக்கும்,2004 இல் புனராவர்த்தன கும்பாபிஷேகமும்நடைபெற்றுள்ளன. ஏழாலையில் உள்ள ஏழுஆலயங்களில் இது ஒன்றாகும்.