யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் முத்திரைச்சந்தியில் அமைந்திருக்கும் சங்கிலி மன்னனுடைய கௌரவத்தின் வெகுமதிச் சின்னம். யாழ்ப்பாண இராசதானியை ஆட்சி செய்த தமிழ் மன்னர் பரம்பரையின் கடைசி மன்னனான சங்கிலியனின் உருவச்சிலை ஆகும். யாழ்ப்பாண மாநகராட்சி மன்றத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் 1974-11-23ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இச்சிலை மீண்டும் 1994-02-109ஆம் திகதி சீர் செய்யப்பட்டு 2011-08-03ஆம் புதிய வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட உருவச்சிலை அப்போதைய அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.



