Friday, April 19

ராசதுரை, மரியாம்பிள்ளை டேவிட்

0

1931.10.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் கரம்பொன் என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல்,நாடகம், விமர்சனம், திறனாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டவர். “கலைக்கோலம்” என்ற சஞ்சிகை நிகழ்ச்சியை இலங்கைவானொலியில் மிகச் சிறப்பாகத் தயாரித்து வழங்கி,கலை, இலக்கியம் சம்பந்தமான தரமான விமர்சனப்போக்கை உருவாக்கக் காரணமாக அமைந்தவர். விளம் பர நிகழ்ச்சிகள் மூலமாக ஈழத்து மெல்லிசைப்பாடல்களை அரங்கேற்றியவர். சுதந்திரன், வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் எழுதி தமது ஆற்றல்களை விரிவுபடுத்திக் கொண்டார். தீவிர வாசிப்புப் பழக்கத்தினால் ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். தேவ கிருபையை முன்னிட்டு வாழும் என்ற சிறுகதை இலங்கையில் தமிழ்க்கல்விப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தச் சிறுகதை இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு தர்மயுக் என்ற இதழில் வெளியாகியது. இவரது படைப்புகள் நாடகமாக, தொலைக்காட்சி நாடகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. காலங் கள் என்ற தொலைக்காட்சி நாடகம் இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டது. வீடு யாருக்கு? என்ற புதினம் மேடை நாடகமாகியுள்ளது. பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது அதன் நிர்வாகத் தயாரிப்பாளருமாவார். யாழ்ப்பாணத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலித்த இத்திரைப்படம் பல விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டது. இவர் பின்னாளில் சொந்தமாக வசீகரா என்றபெயரில் விளம்பர நிறுவனத்தையும் கொழும்பில் நிறுவினார். இவரது புதல்வர் நவீனன் ராசதுரையும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். குழந்தை ஒரு தெய்வம் (சிறுகதைத் தொகுதி, 1961), வீடு யாருக்கு? (புதினம், 1972), ஒரு வகை உறவு (சிறுகதைத் தொகுதி, 1976), விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம், யு Pசழிhநவ ருnhழழெரசநன ஆகிய படைப்புகளை வெளியிட்ட இவர் 14, 2014-10-14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!