1855 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நல்லூர் என்ற இடத்தில் பிறந்தவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களைக் குருவாகக் கொண்டு உரைநடை ஆசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் திகழ்ந்தவர். ஆறுமுகநாவலரது சரித்திரத்தினை எழுதியவர். 1939 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.