Wednesday, February 12

 கனகரத்தினம். இரா. (ஆவணஞானி)

1

குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் என அழைக்கப்படும் இராமசாமி கனகரத்தினம் அவர்கள் யாழ்ப்பாணம் – குரும்பசிட்டி என்ற கிராமத்தில் பிறந்து கண்டி மாவட்டம், முல்கம்பலை என்ற ஊரில் வாழ்ந்து வந்தவர். இலங்கைத்தமிழர்கள், உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், சுவடிகளை ஆவணப்படுத்திய அறிஞரும், தமிழ் ஆர்வலரும், எழுத்தாள ரும் ஆவார். உலகத்தமிழர் ஆவணக்காப்பகம் ஒன்றை நிறுவி, தமிழர் தொடர்பான பல ஆவணங்களைச் சேகரித்து வைத்துள்ளார். உலகத் தமிழர்குரல் என்ற மாத இதழை வெளியிட்டார். 1956 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர் தொடர்பான ஆவணங்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டு வந்தார். இவர் ஆவணங்களை ஈழத்தமிழர் களின் வரலாற்றை ஆவணப் படுத்தி, உலகத் தமிழ் ஆவணக்காப்பகம் என்ற அமைப்பை கண்டியில் நிறுவி அவற்றைப் பாதுகாத்து வந்தார். இவரால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதி யுனெஸ்கோவின் ஆதரவில் சுவிஸ்சர்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகின் பழமை வாய்ந்த பத்திரிகைகள், இதழ்களிலிருந்து உலகத் தமிழர் களின் செய்திகளைத் தரம் பிரித்து சேகரித்து வைத்துள்ளார். இந்த ஆவணங்களை நோர்வே அரசின் உதவியுடன் 200இற்கும் அதிகமான நுண்ணிழைப்படங்களில் பதிவுசெய்து வைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரின் ஆவணங்கள் அடங்கிய கண்காட்சி பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது. 1994ஆம் ஆண்டில் கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். சாலை இளந்திரையன் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ் மக்கள் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். கனடா வாழ் தமிழர்கள் இவருக்கு ஆவணஞானி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். சிறுகதை (“சீசரின் தியாகம் 1952”), அலைகடலுக்கு அப்பால் தமிழர் (1973),உலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி (1974), இறி யூனியன் தீவில் எங்கள் தமிழர் (1979), மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர் (1980), உலகத்தமிழர் ஆவணக்காப்பகம் ஓர் அறிமுகம், உலகத்தமிழர் ஒருமைப்பாடு – சில நற்கூறுகளும் அணுகுமுறைகளும் (1981), ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு, ஒரு குடையின்கீழ் உலகத் தமிழினம் போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் 2016-06-22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

1 Comment

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!