உரும்பிராய் வீதி கோப்பாய் சந்திக்கருகாமையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் அம்பலவாணர் வேலுப்பிள்ளை என்பவரது மனதில்தோன்றிய முருகனது அருளினால் அமரரான தனது மனைவியினது மாங்கல்யத்தினை விற்று செய்யப்பட்ட வேலாயுதத்தினை உந்துவத்தை என்னும் காணியில் முருகனது ஆலயமாக அமைத்து 1862 இல் வேற்பெருமானை மூலவராக நிர்மாணித்தார்.1960 ஆம் ஆண்டில் பூரணமாக கட்டப்பெற்று மூன்றாவது மகா கும்பாபிN~கம் நடைபெற்றது. 100 வருடங்கள் பழமை கொண்டமாமரம் கோவிலின் தல விருட்சமாக இன்றும் விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆண்டு தோறும் வைகாசி விசாகத்தினை முன்னிட்டு பத்துத் தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.