Monday, June 30

இலக்கியக் கலாநிதி கவிஞர் விநாயகர் கந்தவனம்

0

1986களில் ஈழத்தில் போர் உக்கிரமடைந்த காலத்தில் புலம் பெயர்ந்து கனடா சென்று  வாழ்ந்த போதும், நமது மொழி, பண்பாடு, சமயம் என்பன தழைத் தோங்கவேண்டுமென்ற நோக்கில் அயராது மொழிக்காகவும் தமிழ் பண்பாட:டு வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்த இலக்கிய கலாநிதி கவிஞர்.வி.கந்தவனம் அவர்கள் 11.03.2024 அன்று கனடாவில், தனது 91-ஆவது வயதில், இப் பூவுலக வாழ்வில் இருந்து விடைபெற்று விட்டார் என்பதை நினைக்கும் பொழுது நெஞ்சம் கனக்கின்றது.

ஈழத்தில் தென்மராட்சி நுணாவிலில் 1933-10-28 ஆம் நாள் தந்தையார் வேலுப்பிள்ளை விநாயகம் அவர்களுக்கும் தாயார் சின்னம்மா அவர்களுக்கும் மகனாகப் பிறந்த கவிஞர் விநாயகம் கந்தவனம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை நுணாவில் கணேச வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை சாவகச்சேரி டிரிபேக் கல்லூரியிலும் கற்று சித்தி அடைந்த பின் தமிழகம் சென்று சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் புவியியலில் சிறப்புப் பட்டப் படிப்பை முடித்ததுடன், பின்னர் பல்வேறு டிப்ளோமா பட்டங்களையும் பெற்றுக் கொண்டார். இவர் பிரித்தானியாவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் ஆங்கில இலக்கியத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்று இருமொழிப் புலமையாளராகப் புகழ் பெற்று விளங்கினார். தனது பட்டப் படிப்புகளை முடித்துக்கொண்ட கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் தாயகம் திரும்பியதும் குரும்பசிட்டியைச் சேர்ந்த இளையப்பாவின் மகள் நவமணியைத் திருமணம் செய்து சிறப்போடு வாழ்ந்தார்.

அந்தக் காலத்தில் 1958ஆம் ஆண்டில் மாத்தளையில் தனது ஆசிரியர் பணியை ஆரம்பித்துப் பின்னர் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் உப அதிபராகவும், அதனைத் தொடர்ந்து அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் அதிபராகவும் சிறப்புடன் பணியாற்றிக் கல்வி உலகில் தனக்கென ஒரு முத்திரையையும் பதித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கவிஞரின் மொழி ஆளுமையையும், தமிழ், ஆங்கில் மொழி புலமை யாற்றல்களையும் அறிந்த கல்வி அமைச்சு இவரைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பாடநூற்சபையிலும் உறுப்பினராக நியமித்த நிலையில் தமிழ் பாடநூல் வெளியீட்டில் முக்கியமானவராகப் பணியாற்றினார்.

 இவர் 1958இலேயே யாழ்ப்பாணத்தின் புகழ் பூத்த பத்திரிகையான “ஈழகேசரியில்” தொடர்ச்சியாக எழுதி வந்ததால் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளராகப் பரிணமித்தார்.

தனது இளமைப் பருவத்தில் இருந்தே எழுதத் தொடங்கிய கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் ஆத்மஜோதி நா.முத்தையா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் முத்தான தொண்டர், சிவவழிபாடு, சிவபுராண தத்துவம்,தங்கம்மா நான்மணிமாலை,எழுத்தாளன், இலக்கிய உலகம், நல்லூர் நாற்பது, விநாயகப்பா, புதிய சைவ வினாவிடை,கனடாவில் சைவ சமயம், “12 Short stories Lasting night”  என்ற ஆங்கில சிறுகதைத் தொகுப்பு உட்பட சுமார் 27 நூல்களுக்கு மேல்; எழுதி தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்த்துள்ளார்.

2000ஆம் ஆண்டில் இவரால் வெளியிடப்பட்ட “கனடாவில் சைவசமயம்” என்ற நூலில் கனடாவின் பல்வேறு மாகாணங் களிலும் உள்ள சைவத் திருக்கோயில்களின் வரலாற்றை ஆய்வு செய்து அருமையான புகைப் படங்களைக் கொண்டதாக எழுதிப் பலரதும் பாராட்டைப் பெற்றுக் கொண்டார். இந்நூலில் கனடாவில் வாழும் சைவத் தமிழர்களிடையே பண்பாடு ஆலயங்களின் ஊடாகவும், சமயவிழாக்கள்,விரதங்கள், மத அனுட்டா னங்கள் ஊடாகவும் எவ்வாறு பேணப்படுகின்றன என்பதை விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளமை இவரது ஆராய்ச்சித் திறனுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.

இவர் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய காலத்தில் யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்ததுடன் அதன் தலைவரவாக எட்டு வருடங்கள் செயற்பட்டு யாழ்ப்பாணத்தின் புதுமை இலக்கியம் வளர்ச்சி பெற்று இளைஞர்கள் ம்ததியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவினார்.

ஒரு சிறந்த மரபுக் கவிஞ ராகவும்,புதுக்கவிதையாளராகவும் நூற்றுக் .கணக் கான கவிதைகளை யாத்த கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் தலைசிறந்த இலக்கியச் சொற்பொழி வாளராக,பட்டி மன்றங்களின் சொற்போர் வீரராக வும் கொடிகட்டிப் பறந்ததுடன்,தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தான ஸ்தாபகர் துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வேண்டு கோளை ஏற்று, அவரது வழிநடத்தலில், புகழ்பூத்த சமயச் சொற்பொழிவாளராக எல்லோராலும் நன்கு அறியப்பட்டவர்.

இவரது இளமைக் காலத்தில் யாழ்ப்பாணத் தில் இடம்பெற்ற கவியரங்குகளில் கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் இல்லாத கவியரங்கங்களே இல்லை என்னும் அளவுக்கு யாழ் குடாநாட்டின் சகல பிரதேசங்களிலும் இடம் பெற்ற கவியரங்குகளில் தலைமைக் கவிஞராகப் பங்கேற்று பலரதும் பாராட்டைப் பெற்றவர். ஜனரஞ்சகக் கவிஞராக மக்கள் உணர்வுகளைத் தொட்டுக் கவிதை புனையும் வல்லமை வாய்ந்த கவிஞராகத் திகழ்ந்ததுடன் தந்தை செல்வாவின் காலத்தி லேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகாநாடுகளில் தலைமைக் கவிஞராக இருந்து அணிசெய்தமையை அன்றைய இளைஞர்கள் மறந்திருக்கமாட்டார்கள். அவரது கவியரங்கக் கவிதைகளைக் கேட்பதற் காகவே இளைஞர் கூட்டம் அணி திரண்டதையும் மறந்துவிடமுடியாது.

 போர்க்கால வடுக்களைச் சுமந்து பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத் தில் இருந்து புலம் பெயர்ந்து, கனடாவில் வாழ்ந்த பொழுதும் கூட எந்தநேரமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் தூய்மையான வெள்ளை வேட்டியும் சால்வையும் அணிந்தவராகவே ஒரு மகான் போன்றே எந்த மேடைகளிலும் தோன்றுவார்

 கனடாவில் வாழ்ந்து வந்த காலத்தில் ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள் நிறுவிய இந்து சமயப் பேரவையின் காப்பாளராகப் பணியாற்றிய போது ஆத்மஜோதி என்ற பத்திரிகையை மீண்டும் ஆரம்பித்து அதன் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றி னார்.அதேவேளை கனடா ரொறன்ரோவில் சைவ சித்தாந்த மகாநாடுகளில் பல ஆராய்ச்சிக் கட்டுரை களைச் சமர்ப்பித்துப் பலரதும் பாராட்டுக் களையும் பெற்றுக் கொண்டார். கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் சமயம்,கவிதைத்துறை மட்டுமல்லாது, இலக்கியம், இலக்கணம், நாடகம், சமுகவியல் எனப் பல்துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் மீது ஆழ்ந்த பக்தியும்,ஈடுபாடும் கொண்ட கவிஞர் அவர்கள் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இயங்கும் ஆன்மீக நூலகத்தின் அபிவிருத்திக்காக கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் எடுத்த முயற்சியினால் 1500 கனேடிய டொலர் பணத்தைச் சேகரித்து, 2019ஆம் ஆண்டில் இகுருவி விருது வழங்கும் விழாவுக்கு கனடாவுக்கு வருகை தந்திருந்த செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களிடம் கையளித்தார்.

அவரது பன்முக ஆளுமைப்பண்புகளைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

  1. அவரது நுண்ணறிவு.
  2. உலகளாவிய இந்துசமயப்பணி – அதாவது புலம்பெயர்ந்த நாடுகளில் ஆற்றிய

   இந்துசமயப்பணி, குறிப்பாகக் கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகளைக் குறிப்பிலாம்.

  1. அமரரின் எளிமையும் அடக்கமும்.
  2. அவரது குடுப்பப்பொறுப்பும் சேவை மனப்பான்மையும்.
  3. மிகவும் நல்லடக்கமான கட்டுப்பாடுடன்கூடிய ஒழுக்கநெறி.

 நடமாடும் பல்கலைக் கழகமாக விளங்கிய கவிஞர் வி.கந்தவனம் அவர்களுக்கு அமெரிக்கா வின் அரிசோனா மாநிலத் தில் உள்ள உலகப் பல்கலைக் கழகம் அவரது இலக்கிய சமய,சமுகப் பணிகளைக்; கௌரவிக்கும் வகையில் இலக்கியக் கலாநிதிப் பட்டத்தை வழங்கிக் கௌரவித்து அதனூடாக உலகப் பல்கலைக் கழகமும் பெருமை அடைந்தது. அவருக்குக் கிடைத்த இந்தப் பட்டத்தால் ஈழமும் பெருமை அடைகின்றது.

இவரே,

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ!

உந்தன் மைந்தர்கள்

உண்மை தேச பக்தர்கள்!

நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்

நீ எழல் கண்டு (உ)வப்போம்!

எங்கும் உள்ள நாம், ஓ கனடா

நின்னைப் போற்றி அணிவகுத்தோம்!

என்று தொடரும் கனேடிய  தேசிய கீதத்தை  அழகிய செம்மொழியில் தமிழில் மொழி பெயர்த்த பெருமைக்குரியவர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அவர் எப்போதும் “ Do not waste your time. Do something” என்று கூறியதை அவரது வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவமாகக்கொண்டு கனடாவிலும் தனது வாழ்வின் இறுதிமூச்சுவரை செயற்பட்டுவந்தவர். எனது பால்ய நண்பரான சிவா முத்துலிங்கம், செயலாளர், ஒன்ராறியோ இந்துசமயப் பேரவை, ஒன்ராறியோ இந்துசமயப் பேரவையில் பல ஆண்டுகளாகத் தலைவராகப் பணியாற்றியவர். இச்சபையின்மூலம் இந்துசமயத்தையும், தமிழ்மொழியையும் கனடாவில் வளர்க்கப் பல திட்டங்கள் வைத்திருந்ததாகவும் அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாகவும் மனம்வருந்தியவர். யப்பானியப் பேராசிரியர், “கனடாவில் இந்துசமயத்தையும் தமிழையும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வளர்ப்பதில் பெரும்பங்காற்றுகின்றார்கள்” என்பதைக் குறிப்பிட்டதில், கவிநாயகர் கந்தவனத்தின் பங்கு அளப்பரிய பங்காகும். இன்று அமரரது மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதென்றே குறிப்பிடவேண்டும்.

இலக்கியக் கலாநிதி விநாயகர் கந்தவனத்தின் கல்விப்பணி குறிப்பாக ஆசிரியப்பணி உன்னத ஒழுக்கவிழுமியங்களை அடிப்படையாகக் கொண்டமைந்தது.

“குஞ்சி யழகும் கொடுத்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

 நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்விஅழகே அழகு” என்னும் நாலடியார் பாடலுக்கு இலக்கணமாகவும்

“கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடுஅல்ல மற்றயவை”  -குறள்-

அதாவது “ஒருவருக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. மற்றையவை எல்லாம் செல்வங்கள் ஆகா” என்னும் குறளில் உறுதியாக நம்பிக்கைகொண்டு தனது இறுதிமூச்சுவரை மகத்தான பொக்கிசமாக வாழ்ந்தார். 

கவிநாயகர் கந்தவனம் எந்தவித சாதிவேறுபாடுகளையும் கடந்து “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என, மாணவர்களைத் தரம் மட்டுமேகொண்டு கணித்து அவர்களது கல்வி வளர்ச்சியில் தனது நுண்ணறிவினால் ஊக்கமளித்தவர். அவரது பன்முகப்பட்ட ஆற்றல்களையும் பரிணாமங்களையும் அவரது “கோடி ஆங்கோர் ஏழைக்கு கல்வி புகட்டுதல்” தலையாய தர்மம் என்னும் மகாகவி பாரதியின் கூற்றுக்கு இணங்க அமரர் கவிநாயகர் தான் கல்வி கற்பித்த இடங்களில் எல்லாம் மாணவர்களது வாழ்வில் ஒளியேற்றிவைத்த பெருந்தகையாளன் அமரர் கவிநாயகர் கந்தவனம் என்றால் அது மிகையாகாது. அவர் எப்போதும் கூறும் சுலோகம் “Do not waste your time. Do something” என்னும் கூற்று தலைசிறந்த பண்புகளையும் ஆளுமைகளையும் மாணவர்க@டாக வளர்த்தெடுத்த பெருந்தகையாளன்.

“அன்னசத்திரம் ஆயிரம் கட்டுதல் ஆலயம் பதினாயிரம் கட்டுதல் அன்னயாவிலும் புண்ணியம் …“ என்பது ஆழப்பதிந்து வாழ்வில் எவ்வாறு நேரநிர்வாகம் செய்து நாம் வாழ்வில் முன்னேற எப்போதும் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டிருத்தல் வேண்டும் என்பதையும் காலத்தை ஒருபோதும் வீணாக்கக்கூடாது என்பதையும் உணர்த்தி நிற்கின்றது.

“Discipline is discipline. There is no compromise for discipline” எனலாம். அதாவது ஒழுக்கம் என்பதன் அர்த்தம் ஒழுங்கந்தான். அதற்கு எந்தவிதமான சமரசமும் கிடையாது. ஒழுக்கம் தவறினால் சிறைக்குத்தான் செல்லவேண்டு்ம். அங்கேதான் உங்கள் வாழ்வு முடியும் என்பதில் ஆணித்தரமான நம்பிக்கைகொண்டு அதன்படி ஒழுகுகின்றவர் களுக்கு ஓர் உதாரணமாக வாழ்ந்துகாட்டியவர் கவிநாயகர் கந்தவனம்.

இத்தொகுப்பிற்கு உதவிய  யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக் கலைக்கூடத்தின் மதியுரைஞர் மூதவை உறுப்பினர் இரட்ணசிங்ம் ரவீந்திரன்(கனடா) அவர்களுக்கும்  வல்வை. ந.அனந்தராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

fட்டுரையின் முழு வடிவம் ஈழத்தில் இருந்து வல்வை. ந.அனந்தராஜ்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!