இற்றைக்கு 200 ஆண்டு காலத்திற்கு முன்னர் உசனில் காட்டுவளவு என்னும் காணியில் வில்வமரத்திற்கு அருகில் பூசைக்கொட்டில் எனப்படும் சிறுகொட்டிலமைத்து வேற்பெருமானை எழுந்தருளப்பண்ணி விளக்கேற்றிய தாண்டவராயர் மரபில்வந்த விநாசித்தம்பி வைத்திலிங்கம் உடையார் 1900 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தம்வசம் இருந்த அளவிடற்கரிய சொத்துக்களை கோயிலிற்கு தர்மசாதனமாக ஒப்படைத்த முதலாவது தர்மகர்த்தா ஆவார்.இவ்வாறு உருவான ஆலயம் இன்று இவ்வூர் மக்களது அயராத உழைப்பினால் உயர்ந்து நிற்கின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்டமைந்துள்ளமையும் இவ்வாலயத்தின் சிறப்புக்களாகும்.2016-03-18 ஆம் நாள் புதிதாக அமைக்கப்பட்டஇராஜகோபுரத்தின் பிரதிஷ~;டா மஹா கும்பாபிN~கம் நிறைவேறியமை குறிப்பிடத்தக்கது