Monday, April 29

சிவசாமி, விநாயகமூர்த்தி (பேராசிரியர்)

0

1933 – 10 – 16 ஆம் நாள் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் – சிறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை நாட்டு வைத்தியத்திலும், சோதிடக் கலையிலும் ஈடுபட்டவர். தனது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவிலும், பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்று 1955 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், தமிழ், வரலாறு ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். 1961 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பாளி, இந்திய வரலாறு ஆகியவற்றுடன், சமஸ்கிருதத்தில் சிறப்புப் பட்டமும் பெற்றார். யாழ்ப்பாணக் கல்லூரியில் 1958 முதல் 1974 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். இடையில் 1962 முதல் 1965 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 1974 இல் ஆரம்பிக்கப்பட்ட போது, சிவசாமி அதன் ஆரம்பகால விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். சமஸ்கிருதத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசாமி, வரலாறு, இந்துநாகரிகம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார். பேராசிரியர் சிவசாமி யாழ்ப்பாணத் தொல்லியல் கழகத்தின் நிறுவன செயலாளராக 1971 இல் இருந்து பணியாற்றினார். அத்துடன் பூர்வகலா என்ற இதழையும் வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த முதலாவது தொல்லியல் ஆய்விதழ் இதுவாகும். பேராசிரியர் ப. புஷ்பரத்தினம் இவரது மாணவராவார். திராவிடர் – ஆதிவரலாறும் பண்பாடும் (1973), தென்னாசியக் கலை மரபில் நாட்டிய சாஸ்திரமரபு (1992), தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள் – ஒரு வரலாற்று நோக்கு (1998), தமிழும் தமிழரும் (1998), இந்துப் பண்பாடு அன்றும் இன்றும் (2005), தொல்பொருளியல்-ஓர் அறிமுகம்(1972), ஞானப்பிரகாசரும் வரலாற்றாராய்ச்சியும் (1974), யாழ்ப்பாணக் காசுகள் (1974), ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும் (1976)கலாமஞ்சரி, பரதக்கலை (1988), சமஸ்கிருதம்- தமிழ் சிற்றகராதி (1987), தீவகம் – ஒரு வரலாற்று நோக்கு (1990)), One Hundred years of Epigraphical Studies in Sri Lanka (1975, Revised 1988) Some Aspects of South Asian Epigraphy (1985), Some Facets of Hinduism (1988), The Sanskrit Tradition of the Sri Lanka Tamils ஆகிய நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு பெருமை சேர்த்து 2014-11-08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!