1908-09-02 ஆம் நாள் பருத்தித்துறை – வியாபாரிமூலை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணன் என்ற புனைபெயரில் கவிபாடியவர். சிறுவயது அனுபவங்களை அப்படியே இவரது கவிதைகளில் காணலாம். அந்தநாள் வாராதோ என்ற கவிதை இதற்கு நல்ல உதாரணமாகும். ஆசிரியரான இவர் சிறுவயது அனுபவங்கள், சமூகக் குமுறல்கள் பற்றியே அதிகளவில் பாடியவர். 1968-06-10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.