யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக இட்லி இடம்பிடித்துள்ளது. அரைத்த உழுந்துடன் அரிசி அரைத்து மாவாக்கி சேர்த்து புளிக்க வைத்து இதற்கென தயாரிக்கப்பட்ட சுடுகலனில் ஊற்றி செய்யப்படு வது மரபு. இத்தகைய உணவுவகைகள் இறந்த ஒருவருடைய அந்தியேட்டி முடியும் வரை உறவினர்களால் வழங்கப்படுவது வழக்கம்.இதனை பட்டினித்தீன் என அழைக்கின்றனர்.


