வாரத்தில் ஓர் நாள் குறிப்பாக சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத் தமிழர்களின் வீடுகள் தோறும் கூழ் காய்ச்சுகின்ற வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. குறிப்பாக பனம்விதையிலிருந்து உருவான பச்சை ஒடியலை மாவாக்கி அதனுடன் குறிப்பிட்ட மரக்கறிவகைகளுடன் கடல் மாமிச உணவுகளை சேர்த்து தயாரிக்கப்படும் இக்கூழானது யாழ்ப்பாணத் தமிழ் மக்களது வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகும்.



