இச்சிவாலயம் இணுவில் கிழக்கு, கோண்டாவில் வடக்கு, உரும்பிராய் தென்மேற்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பில் அருகே மயானத்தினையும் கொண்டு சிவபூமியாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. காலத்தால் முந்திய இவ்வாலயமானது பல சித்தர்களின் வழிநடத்தலால் வளர்ச்சியடைந்தது. குறிப்பாக இணுவில் பெரிய சந்நியாசியார்,அருளம்பல சுவாமிகளைக் குறிப்பிடலாம். குலோத்துங்க சோழனின் படைத்தளபதியான கருணாகரத்தொண்டைமான் யாழ்ப்பாணத்தில்இருந்தபோது இவ்வாலயத்தின் சிறப்பினையறிந்து இங்கு வருகைதந்து தங்கி தரிசித்துச் சென்றான் என வரலாற்றுப்பதிவுகள் கூறுகின்றன. ஒவ்வொரு வருடத்திலும் ஆடி மாதத்தில் கொடியேற்றத்திருவிழாவுடன் ஆரம்பித்து தொடர்ந்து பன்னிரண்டு தினங்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.