Monday, October 13

கேசவராஜன் நவரட்ணம், திரைப்படம் –  அரியாலை.

0
நவரட்ணம் கேசவராஜன் ஈழத்து திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை வாய்ந்தவர். அரியாலையில் 1962 அக்டோபர் 19 ஆம் நாள் பிறந்து தனது இறுதிப் பகுதியில் மானிப்பாய், சுதுமலையில் வசித்து வந்தவர் இவர் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு களைத் திரைப்படங்களாக வெளிக்கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியலில், குறிப்பாக திரைப்படத்துறையில், தன்னார்வமாக இணைந்து கொண்ட அமரர் கேசவராஜன், நவரத்தினம் கேசவராஜன் ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார். அது மட்டுமல்லாது இவர் விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். 1986-ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியுடன் இணைந்து பல குறும்படங்களையும், முழுநீளத் திரைப் படங்களையும் இயக்கினார். ஈழப்போர்க் காலத்தில் அப்பகுதிகளில் உள்ள இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களை திரைப் படத்துறைசார்ந்து வளர்த்துவிட்டவர். 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படிக்கும் போதே நாடகம், திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். பல வீதி, மேடை நாடகங்களைத் தயாரித்து வழங்கினார். கண்டியில் தனது கல்வியை தொடர்ந்தார்;. சினிமா மீதான ஈர்ப்பினால் இயக்குனரானர்.
1986ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட ‘தாயகமே தாகம்’ என்ற முழுநீள திரைக்காவியத்தின் மூலம், தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, இவரால் நெறிப்படுத்தி, தயாரிக்கப்பட்ட பிஞ்சுமனம், திசைகள், கடலோரக்காற்று போன்ற திரைக்காவியங்கள் பெருவெற்றியைப் பெற்றிருந் தன.
1986ம் ஆண்டு தாயகமே தாகம், மரணம் வாழ்வின் முடிவல்ல போன்ற படங்களை இயக்கினார.; அதன் விளைவாக தேசிய தலைவரின் பாராட்டை பெற்றவர். இலங்கையில் விடுதலைப் போராட்டம் வலுப்பெற்றிருந்த நாட்களில் விடுதலைப் புலிகளின் நிதர்சனம் என்ற காட்சியூடகத்தின் மூலம் சினிமா முயற்சிகளைத் தொடங்கி, கடற்புலிகளின் 10ஆண்டு நிறைவை முன்னிட்டு “அம்மா நலமா” மற்றும் “கடலோரக் காற்று” என்ற இரண்டு படங்களையும் பல குறும்படங்களையும் உருவாக்கியவர். பல வீதி நாடகங்கள் மேடை நாடகங்களை தயாரித்து வழங்கிய இவர் பிஞ்சுமனம், திசைகள் வெளிக்கும், போன்ற படங்களை இயக் கியுள்ளதுடன் வலிந்து காணாமலாக் கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் அப்பா வருவார் போன்ற பல குறும்படங்  களை இயக்கியும் நடித்தும் உள்ளார். 
2009இன் பின்னர் இவரால் தயாரிக்கப் பட்ட ‘பனைமரக்காடு’ என்ற திரைப்படம் மூலம், போருக்கு பிந்திய தமிழர் தாயகத்தின் காட்சிகளை மீண்டும் திரைமொழியில் காவியமாக தொகுத்திருந்தார்.
திரு சத்தியன் கோபாலகிருஸ்ணன் (முரளி), திரு ஞானதாஸ் காசிநாதர், திரு யசிதரன் அந்தோனிப்பிள்ளை, திரு கோபிஷாந் ரவீந்திரன், பிரபல திரைப்பட இயக்குனர் பிரசன்னா விதானகே, அசோகா கந்தகம, விமுக்தி ஜெயசுந்தரா போன்ற கலைஞர்களுடன் பயணித்தவர்.  
சிங்களத் திரைப்படத்துறையிலும் ஆர்வமுள்ள ஒரு படைப்பாளராக, வடக்கையும் தெற்கையும் இணைத்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் என்றும் அறியப்பட்டவர். பிரசன்னா விதானகே, அசோகா கந்தகம, விமுக்தி ஜெயசுந்தரா ஆகியோர் இயக்கிய மூன்று பாகத் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.
இவரால் தயாரிக்கப்பட்ட பனைமரக்காடு  திரைப்படத்தின்; மூலம் போருக்குப் பின்னரான சூழலில் மக்களின் வாழ்க்கையை உலகறியச் செய்தார்.
பங்களித்த திரைப்படங்கள் ஒரே பார்வையில் 
தாயகமே தாகம்
மரணம் வாழ்வின் முடிவல்ல
பிஞ்சுமனம்
திசைகள் வெளிக்கும்
கடலோரக் காற்று
அம்மா நலமா
பனைமரக் காடு
அப்பா வருவார் (குறும் படம்)
வெடி மணியமும் இடியன் துவக்கும் (குறும்படம்)
தாயக விடுதலை உணர்வோடு திரைப்படங்களை தயாரித்து ஈழத்தில் திரைப்படக்கலையின் முன்னோடியாக திகழ்ந்த இவர்  2021-01-09 ஆம் நாள் தனது 58-வது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!