Monday, October 13

ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 

0
நல்லை ஆதீனத்தைத் தோற்றுவித்த முதலாவது குருமுதல்வர்,  ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச் சாரிய சுவாமிகள் 11-04-1981இல் பூரணத்து வம் பெற்றதன் பின்னதாக, நல்லை ஆதீனத் தின் குருமுதல்வராக வீற்றிருந்து அறமாற் றிய சுவாமிகள், யுத்த காலத்திலும் தன்னா லான பணிகளைச் சிறப்பாக ஆற்றி வந்தவர்.
சுவாமி அவர்கள் எல்லா மதத்தினருடனும் அன்பாக பழகி மதம் கடந்து மனித நேயத்தையும் மாண்பையும் அதிகமாக நேசித்து அனைத்து மக்களாலும் விரும்பப்படுபவராகவும் போற்றப்படுபவராகவும் தனது எளிமையான வாழ்வை வாழ்ந்திருந்தார். அத்துடன் சிறந்த மனித நேயப் பண்பாளரான இவர் ஈழத்தமிழர் வாழும் தேசந்தோறும் பல மாநாடுகளில் பங்குபற்றி மத விழுமியங்களோடு சமூக விழுமியங் களையும் பரப்பிய பெருமைக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர்; 01.05.2025; இறைவனடி சேர்ந்தார்.
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!