300 வருடங்கள் பழமை வாய்ந்தது எனக் குறிப்பிடப்படும் இவ்வாலயம் சுதுமலை அம்மன்,முருகன் ஆகிய ஆலயங்களுடன் இணைந்திருந்து அருள்பாலித்து வருகின்றார். ஆரம்பத்தில் விநாயகப்பெருமானை வைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதப்பெருமானை வைத்து வழிபடலாயினர். இம்மாற்றமானது எதற்காக நடைபெற்றது என்றும் எப்போது நடைபெற்றது என்றும் சரியாக அறியமுடியவில்லை.ஒவ்வொரு வருடத்திலும் பங்குனி உத்தரமன்று தேர்த்திருவிழா நடைபெறும் வகையில் பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருவது வழக்கம். 2016 ஆம் ஆண்டு கும்பாபிN~கம் நடைபெற்றது.